Friday, 17 March 2017

ஆதார் மூலம் பான்கார்ட் பெற

பொது சேவை மையத்தில் பான்கார்ட் பெற விண்ணப்பிப்பது :-
மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம் மேற்பார்வையில் இந்திய வருமான வரி துறையால் வழங்கப்படும் அடையாள சான்று பான் கார்ட். ஆங்கில எழுத்தாலும் எண்களாலும் ஆன 10 இலக்க தனித்துவ அடையாள எண். வருமான வரி செலுத்தவும், பங்குகள் வாங்கி விற்க கணக்கு துவக்க, சேவை வரி பிடித்தம்/திரும்ப பெறவும், அரசின் பல்வேறு துறைகளின் சேவைகளை இந்திய குடிமகன்கள் பயன்படுத்தி கொள்ளவும், "பான்கார்ட்" பெறுவது கட்டாயமாக்கபட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் CSC சேவை மையம் சென்று விண்ணப்பித்து பெறலாம்.
நுகர்வோர் வசதிக்காக, அரசு மக்களுக்கு, CSC சேவை மையம் மூலமாக, பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அதில் ஒன்று பான்கார்ட், நிரந்தர கணக்கு எண் (PAN) வழங்குவது.
பான்கார்ட் தேவை படுவோர் உங்கள் அருகில் உள்ள CSC பொது சேவை மையதிற்க்கு சென்று தேவையான சான்றிதழ்களை கொடுத்து, விண்ணப்பம் செய்யலாம்.
CSC பொது சேவை மையத்தை நடத்துபவர் உங்களிடம் தேவையான தகவல்களை பெற்று, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களை இணைத்து இணையதளம் வழியாக, உங்களுக்காக வின்னப்பிப்பார். இவர் கிராம தொழில் முனைவர் என்று அழைக்கபடுபவர்.
இந்திய குடிமகன் எனும்
அடையாள சான்று - personality Proof
வசிப்பிட சான்று - Residence Proof
உங்கள் புகைப்படம் 2 - Passport Size Photographs
ஏற்றுகொள்ளக்கூடிய தேவையான அடையாள சான்றுகள்
1. ஆதார் கார்ட் Aadhar Card
2. பள்ளி எஸ்.எஸ்.எல்.சி சான்றிதழ் School Leaving Certificate
3. மெட்ரிகுலேஷன் சர்டிபிகேட் Matriculation Certificate
4. டிகிரி சர்டிபிகேட் Degree from perceived Board or Institute கல்லூரி பட்டம்
5. பாஸ்போர்ட் Passport
6. ரேசன் கார்ட் Ration Card குடும்ப அட்டை
7. வோட்டர் ஐ டி Voter Card வாக்காளர் அடையாள அட்டை
8. டிரைவிங் லைசென்ஸ் Driving License ஓட்டுனர் உரிமம்
ஏற்றுகொள்ளக்கூடிய தேவையான வசிப்பிட அடையாள சான்றுகள்
1. ஆதார் கார்ட் Aadhar Card
2. பாஸ்போர்ட் Passport
3. ஏலக்டிரிக்சிட்டி பில் Electricity Bill
4. டெலிபோன் பில் Telephone Bill
5. வாட்டர் பில் Water Bill தண்ணீர் வரி கட்டிய ரசீது சொத்து வரி ரசீது
6. வோட்டர் ஐ டி Voter Card வாக்காளர் அடையாள அட்டை
பில்ஸ் 6 மாதங்களுக்குள் இருக்க வேண்டும்
கிராம தொழில் முனைவர் கிழ் கண்ட வழிமுறைகளை மேற்கொண்டு பான் கார்ட் விண்ணப்பத்தை நிரப்பி விண்ணப்பம் செய்வார்.
கிராமபுற தொழில் முனைவர் கிழ் கண்ட வழி முறைகளை பின் பற்றி வின்னப்பத்தை பூர்த்தி செய்வார்.
கிராமபுற தொழில் முனைவர் முதலில் பிரத்தியோகமாக வழங்கப்பட்ட அடையாளஎண் மற்றும் கடவு சொல்லை பயன்படுத்தி இணையதளத்தில் நுழைந்து சேவைகள் மேற்கொள்வார்
விண்ணப்பத்தில் கேட்கப்பட்ட புள்ளி விவரங்களை டைப் செய்து பூர்தி செய்யவேண்டும்.
பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், கையெழுத்து, தேவையான சான்றிதழ்கள் மற்றும் பான் விண்ணப்பம் முதலியவவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
பிறகு பணம் செலுத்த வேண்டும்
அதன் பிறகு விண்ணப்பம் செய்ததற்கான அத்தாட்சியை பதிவுறக்கம் செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment