CSC பொது சேவை மையம் ஆரம்பிக்க - விண்ணப்பம் செய்ய தேவையான
விவரங்கள்:
சி. எஸ். சி மையம் துவக்குவதற்கு தேவையான புள்ளி
விவரங்களையும் சான்றிதழ்களையும் எடுத்துவைத்து கொண்டு விண்ணப்பத்தை நிரப்பலாம்.
தெளிவாகவும் சரியாகவும் நிரப்பினால் நமக்கு விரைவாக அனுமதி கிடைக்கும் அல்லவா?
சரி
என்னனென்ன விவரங்கள் தேவை என் பார்க்கலாம்.
பொதுவாக
எல்லா விண்ணப்பங்களிலும் நம்மை பற்றியும், நாம்
வசிக்கும் இடம் பற்றியும், நாம் பார்க்கும் வேலை அல்லது தொழில் பற்றியும்தான் அதிகம்
கேட்பார்கள். விண்ணப்பபாரத்தை பூர்த்தி செய்யும்பொது எல்லாம் தெரிந்தது போல்
இருக்கும். ஆனால் ஞபக்கதுக்கு வராது. எனவே தேவையான விவரங்களை ஒரு பேப்பரில் குறித்து
வைத்து கொண்டு விண்ணப்பத்தை நிரப்பினால் குழப்பம் வராது.
முதலில்
நம்மை பற்றி என்னென்ன கேட்கிறார்கள் என பார்ப்போம்!.
உங்களின் ஆதார் எண்,
செல்பேசி எண்,
உங்களின் பான்கார்டு
எண், மற்றும் அதன் ஜெராக்ஸ்
காப்பி,
உங்களின் வங்கிகணக்கு
எண்,
உங்கள் வங்கியின் பெயர்,
உங்கள் வங்கியின் IFSC எண்,.
உங்கள் மின்னஞ்சல்
முகவரி
கூடுதலாக ஆதார் பதிவு
மேற்கொள்ள உரிய ஆபரேட்டர்/சூப்பர் வைசர் பயிற்சி சான்றிதழ்.
கடையின்
இருப்பிடம் பற்றிய தகவல்கள்.
உங்கள் கடையின் பெயர்,
கடையின் முகவரி,
முகவரி அமைந்துள்ள இடம்
கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட இடமா? ,
பஞ்சாயத்தின் பெயர்
கிராமத்தின் பெயர்,
ஊராட்சி/பேருராட்சி
வட்டம்/தாசில்தார் தாலுக்கா?
உங்கள் அருகில் உள்ள
அஞ்சல் அலுவலக முகவரி ,
பின் கோட் (அஞ்சல்
குறியீட்டு எண்),
பதிவேடுகள்
உங்கள் கடையின் உட்புற
போட்டோ .வெளிப்புற போட்டோ (கடையின் முகப்பு பதாகையுடன்)...100 KB அளவு இருக்க வேண்டும்.
அந்த படங்களின்
அமைவிடங்கள் பூகோள ரீதியான புள்ளி விவரங்கள் (இதனை இணையதளம் மூலம் தெரிந்து
கொள்ளலாம்)
கட்டமைப்பு.
உங்கள் கடையின் அமைப்பு
எப்படி இருக்க வேண்டும். என்னென்ன உபகரணங்கள் தேவை. வேலையாட்கள் விவரம், அலுவலகம் நடத்துவதற்கு
தேவையான கூடுதல் மையம் துவக்குவதற்கு அரசு வரையறுத்துள்ள படி, கணினி மற்றும் அதனை
சார்ந்த அச்சு பொறிகள், மென்பொருட்கள், டேப்லட் , ஸ்மார்ட்போன் , இணையதள
இணைப்பு,
இணையதள இணைப்பு வழங்கும்
நிறுவனத்தின் பெயர் , தடையின்றி சேவை
செய்வதற்கு தடையில்லா தொடர் மின்சாரம், உயிரியளவு
கருவிகள், வழங்கப்படும் சேவைக்கு
தகுந்தாற் போல் ஒருவரோ இருவரோ முதலில் பணி செய்யலாம்.
விண்ணப்பதாரரின்
தகுதிகள்.
விண்ணப்பதாரர்
உள்ளூரில் வசிபவராக இருக்க வேண்டும்.
18
வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
அங்கீகாரம் பெற்ற கல்வி
நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு வரை/தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
உள்ளூர் மொழியில்
சரளமாக எழுத படிக்க தெரிந்த இருக்க வேண்டும். அத்துடன் அடிப்படை ஆங்கில அறிவும்
இருத்தல் அவசியம்.
கணினியை பற்றிய
அறிவும். /இயக்க தெரிந்தவரக இருக்க வேண்டும்.
மின்னணு பண பரிவர்த்தனை, காகிதம் இல்லா அலுவலக
பணிகள் மேற்கொள்பவராகவும் இருக்க வேண்டும்.
சமுகமாற்றத்தை, சமுதாய வளர்ச்சியில்
அக்கரைகொண்டவராகவும், கிராம வளர்ச்சியில்
தன்னை ஈடுபடுத்திகொண்டு, முழு அர்பணிப்புடன்
தன்னார்வு தொண்டராக பணியாற்ற வேண்டும்.\
உள் கட்டமைப்பு - குறைந்த பட்ச தேவைகள்
32 பிட் உள்ள கணினி, அத்துடன் அனுமதி பெற்ற Windows
XP அல்லது அதற்க்கு மேல் வெளிவந்துள்ள இயங்குதள
மென்பொருள்,
C டிரைவ் க்கு குறைந்த பட்சம் 100 GB
(HDD), 320 GB கொள்ளளவு உடைய சேமிப்பு கொள்கலன்
குறைந்த பட்சம் 512 MB RAM (ஆதார் சேவைகளுக்கு கூடுதலாக
தேவை)
CD / DVD டிரைவ்
UPS அல்லது 5 மணி நேரம் தடை இல்லா தொடர் மின்சாரம் வழங்கும்
ஜெனரேட்டர்
லேசர் பிரிண்டர், ஜெராக்ஸ் ஸ்கேனர் மூன்றும் ஒன்றாக உள்ள சாதனம்
குறைந்த விலையில் கிடைகிறது,, பிறகு இன்ஜெக்ட்
கலர் பிரிண்டர்
வெப் அல்லது டிஜிட்டல் கேமரா
அகல-இணையதள இணைப்பு
பயோமெட்ரிக் பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர்
நீங்கள் ஆதார் சேவைகள் செய்யும் போது அதற்க்கு தேவையான ஐரிஷ் ஸ்கேன்ர்
தேவைப்படும்.
புதிய சி.எஸ்..சி இணையதளத்தில் பதிவு செய்வது!
U.C.L. சாப்ட்வேர் என்றால் என்ன! .......
UID OPERATOR / SUPERVISOR சர்டிபிகேட்டை எங்கே பதிவு செய்வது!
..................என்பது பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.
நான் எங்கள் ஊரில் ஆதார் மையம் நடத்த விரும்புகிறேன். அதற்கு தங்கள் உதவ முடியுமா.
ReplyDelete