Wednesday, 10 May 2017

Village Level Entrepreneur

     VLE, ஆதார் பதிவு மையம் ஆரம்பிக்க தேவையானவை மற்றும் சி எஸ்.சி எஸ் பி வி (CSC SPV) யில் அனுமதி பெறுவதும் எப்படி?
    
     முதலில் கிராமபுற தொழில் முனைவராக (VLE), மத்திய அரசின் CSC மையத்தில் பதிவு செய்ய வேண்டும்,
OMT ID வாங்க வேண்டும். 
மையம் நடத்துவதற்கு தேவையான லேப்டாப் கணினி, வெப் கேமரா. பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், ஐரீஸ் ஸ்கேனர் பல்நோக்கு பிரிண்டர் , யூஎஸ்பி ஹப்,சி.எப்.எல் லைட், ஆகியவை முன் கூட்டியே வாங்கி வைத்திருக்க வேண்டும், பதிவு செய்ய போட்டோ எடுக்கும்போது வருபவர்களின் பின் புலம் வெண்மையாக இருக்க வெள்ளை துணி அல்லது வெள்ளை நிறத்தில் சுவர் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கிராம புற தொழில் முனைவோர் எல்லாவற்றையும் ஏற்பாடு செய்து விட்டு CSC மையத்திற்க்கு விண்ணப்பம் செய்து அனுமதி பெற வேண்டும்.

விண்ணப்பம் செய்ய  https://register.csc.gov.in/register

     UID சர்டிபிகேட் வைத்துள்ள சூப்பர் வைசர் அல்லது ஆப்ரேட்டர் மற்றும் பதிவு செய்ய வருவோரின் டாக்குமெண்ட்களை சரிபார்க்க UID குறிப்பிட்டுள்ள வேரிபயர் அலுவலரை பதிவு செய்ய படும் நேரங்களில் பயன் படுத்தி கொள்ள வசதியாக ஒருவரை நியமிக்க வேண்டும், அவர் ஓய்வு பெற்றவராகவும் இருக்கலாம்.  

2.UID KIT CSCSPV யில் கிடைக்குமா?அல்லது எப்படி எங்கு வாங்க வேண்டும்?
நீங்கள் UID குறிப்பிட்ட, அனுமதி பெற்றவரிடமிருந்து வாங்க வேண்டும். இதன் விலை  சுமார் Rs.1,30,000 1,40,000 வரை இருக்கலாம். CSCSPV கிட்டை நேரடியாக விற்கவில்லை.

3.சூப்பர் வைசர் /ஆபரேட்டர் சர்டிபிகேட்  எப்படி பெறுவது?
UID-NSEIT இணையதளத்தில் தேவையான விவரங்கள் உள்ளது,


4. ஆதார் என்ரோல்மென்ட் விண்ணப்பம் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட அத்தாட்சி சான்றிதழ்களை சரிபார்க்க டாக்குமென்ட் வெரிபயர் என்ன தகுதி பெற்று இருக்க வேண்டும் என்று UIDAI வரையறுத்துள்ளது. அதன் படி Class3/GroupC மற்றும் அதற்கு மேல் ஓய்வு அல்லது பனியில் உள்ள அரசு ஊழியராக இருக்க வேண்டும். அவர் என்ரோல்மென்ட் மையத்தில் பொறுப்புள்ள (அதிகாரமுள்ள) நபராக கருதப்படுகிறார். எனவே ஆதார் பதிவு மையத்தில் இவரின் வருகை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

5. CSCSPV யில் பதிவு செய்து என்ரோல்மென்ட் ஏஜென்சியின்  பெயர், ஏஜென்சி எண் பெறுவது அவசியம், 
இன்னும் பல விவரங்கள் அடுத்த பதிவில் ...

Friday, 31 March 2017

விண்ணப்ப விவரங்கள்


CSC பொது சேவை மையம் ஆரம்பிக்க - விண்ணப்பம் செய்ய தேவையான விவரங்கள்:





சி. எஸ். சி மையம் துவக்குவதற்கு தேவையான புள்ளி விவரங்களையும் சான்றிதழ்களையும் எடுத்துவைத்து கொண்டு விண்ணப்பத்தை நிரப்பலாம். தெளிவாகவும் சரியாகவும் நிரப்பினால் நமக்கு விரைவாக அனுமதி கிடைக்கும் அல்லவா?



சரி என்னனென்ன விவரங்கள் தேவை என் பார்க்கலாம்.



பொதுவாக எல்லா விண்ணப்பங்களிலும் நம்மை பற்றியும், நாம் வசிக்கும் இடம் பற்றியும், நாம் பார்க்கும் வேலை அல்லது தொழில் பற்றியும்தான் அதிகம் கேட்பார்கள். விண்ணப்பபாரத்தை பூர்த்தி செய்யும்பொது எல்லாம் தெரிந்தது போல் இருக்கும். ஆனால் ஞபக்கதுக்கு வராது. எனவே தேவையான விவரங்களை ஒரு பேப்பரில் குறித்து வைத்து கொண்டு விண்ணப்பத்தை நிரப்பினால் குழப்பம் வராது.



முதலில் நம்மை பற்றி என்னென்ன கேட்கிறார்கள் என பார்ப்போம்!.



உங்களின் ஆதார் எண்,



செல்பேசி எண்,



உங்களின் பான்கார்டு எண், மற்றும் அதன் ஜெராக்ஸ் காப்பி,



உங்களின் வங்கிகணக்கு எண்,



உங்கள் வங்கியின் பெயர்,



உங்கள் வங்கியின் IFSC எண்,.



உங்கள் மின்னஞ்சல் முகவரி



கூடுதலாக ஆதார் பதிவு மேற்கொள்ள உரிய ஆபரேட்டர்/சூப்பர் வைசர் பயிற்சி சான்றிதழ்.



கடையின் இருப்பிடம் பற்றிய தகவல்கள்.



உங்கள் கடையின் பெயர்,



கடையின் முகவரி,



முகவரி அமைந்துள்ள இடம் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட இடமா? ,



பஞ்சாயத்தின் பெயர்



கிராமத்தின் பெயர்,



ஊராட்சி/பேருராட்சி வட்டம்/தாசில்தார் தாலுக்கா?



உங்கள் அருகில் உள்ள அஞ்சல் அலுவலக முகவரி ,



பின் கோட் (அஞ்சல் குறியீட்டு எண்),



பதிவேடுகள்



உங்கள் கடையின் உட்புற போட்டோ .வெளிப்புற போட்டோ (கடையின் முகப்பு பதாகையுடன்)...100 KB அளவு இருக்க வேண்டும்.



அந்த படங்களின் அமைவிடங்கள் பூகோள ரீதியான புள்ளி விவரங்கள் (இதனை இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்)



கட்டமைப்பு.



உங்கள் கடையின் அமைப்பு எப்படி இருக்க வேண்டும். என்னென்ன உபகரணங்கள் தேவை. வேலையாட்கள் விவரம், அலுவலகம் நடத்துவதற்கு தேவையான கூடுதல் மையம் துவக்குவதற்கு அரசு வரையறுத்துள்ள படி, கணினி மற்றும் அதனை சார்ந்த அச்சு பொறிகள், மென்பொருட்கள், டேப்லட் , ஸ்மார்ட்போன் , இணையதள இணைப்பு,



இணையதள இணைப்பு வழங்கும் நிறுவனத்தின் பெயர் , தடையின்றி சேவை செய்வதற்கு தடையில்லா தொடர் மின்சாரம், உயிரியளவு கருவிகள், வழங்கப்படும் சேவைக்கு தகுந்தாற் போல் ஒருவரோ இருவரோ முதலில் பணி செய்யலாம்.



விண்ணப்பதாரரின் தகுதிகள்.



விண்ணப்பதாரர் உள்ளூரில் வசிபவராக இருக்க வேண்டும்.



18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.



அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு வரை/தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.



உள்ளூர் மொழியில் சரளமாக எழுத படிக்க தெரிந்த இருக்க வேண்டும். அத்துடன் அடிப்படை ஆங்கில அறிவும் இருத்தல் அவசியம்.



கணினியை பற்றிய அறிவும். /இயக்க தெரிந்தவரக இருக்க வேண்டும்.



மின்னணு பண பரிவர்த்தனை, காகிதம் இல்லா அலுவலக பணிகள் மேற்கொள்பவராகவும் இருக்க வேண்டும்.



சமுகமாற்றத்தை, சமுதாய வளர்ச்சியில் அக்கரைகொண்டவராகவும், கிராம வளர்ச்சியில் தன்னை ஈடுபடுத்திகொண்டு, முழு அர்பணிப்புடன் தன்னார்வு தொண்டராக பணியாற்ற வேண்டும்.\


உள் கட்டமைப்பு - குறைந்த பட்ச தேவைகள்



32 பிட் உள்ள கணினி, அத்துடன் அனுமதி பெற்ற Windows XP அல்லது அதற்க்கு மேல் வெளிவந்துள்ள இயங்குதள மென்பொருள்,

C டிரைவ் க்கு குறைந்த பட்சம் 100 GB (HDD), 320 GB கொள்ளளவு உடைய சேமிப்பு கொள்கலன்

குறைந்த பட்சம் 512 MB RAM (ஆதார் சேவைகளுக்கு கூடுதலாக தேவை)

CD / DVD டிரைவ்

UPS அல்லது 5 மணி நேரம் தடை இல்லா தொடர் மின்சாரம் வழங்கும் ஜெனரேட்டர்

லேசர் பிரிண்டர், ஜெராக்ஸ் ஸ்கேனர் மூன்றும் ஒன்றாக உள்ள சாதனம் குறைந்த விலையில் கிடைகிறது,, பிறகு இன்ஜெக்ட் கலர் பிரிண்டர்

வெப் அல்லது டிஜிட்டல் கேமரா

அகல-இணையதள இணைப்பு

பயோமெட்ரிக் பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர்

நீங்கள் ஆதார் சேவைகள் செய்யும் போது அதற்க்கு தேவையான ஐரிஷ் ஸ்கேன்ர் தேவைப்படும்.



புதிய சி.எஸ்..சி இணையதளத்தில் பதிவு செய்வது!

U.C.L. சாப்ட்வேர் என்றால் என்ன! .......

UID OPERATOR / SUPERVISOR சர்டிபிகேட்டை எங்கே பதிவு செய்வது!

..................என்பது பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.

Friday, 17 March 2017

ஆதார் மூலம் பான்கார்ட் பெற

பொது சேவை மையத்தில் பான்கார்ட் பெற விண்ணப்பிப்பது :-
மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம் மேற்பார்வையில் இந்திய வருமான வரி துறையால் வழங்கப்படும் அடையாள சான்று பான் கார்ட். ஆங்கில எழுத்தாலும் எண்களாலும் ஆன 10 இலக்க தனித்துவ அடையாள எண். வருமான வரி செலுத்தவும், பங்குகள் வாங்கி விற்க கணக்கு துவக்க, சேவை வரி பிடித்தம்/திரும்ப பெறவும், அரசின் பல்வேறு துறைகளின் சேவைகளை இந்திய குடிமகன்கள் பயன்படுத்தி கொள்ளவும், "பான்கார்ட்" பெறுவது கட்டாயமாக்கபட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் CSC சேவை மையம் சென்று விண்ணப்பித்து பெறலாம்.
நுகர்வோர் வசதிக்காக, அரசு மக்களுக்கு, CSC சேவை மையம் மூலமாக, பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அதில் ஒன்று பான்கார்ட், நிரந்தர கணக்கு எண் (PAN) வழங்குவது.
பான்கார்ட் தேவை படுவோர் உங்கள் அருகில் உள்ள CSC பொது சேவை மையதிற்க்கு சென்று தேவையான சான்றிதழ்களை கொடுத்து, விண்ணப்பம் செய்யலாம்.
CSC பொது சேவை மையத்தை நடத்துபவர் உங்களிடம் தேவையான தகவல்களை பெற்று, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களை இணைத்து இணையதளம் வழியாக, உங்களுக்காக வின்னப்பிப்பார். இவர் கிராம தொழில் முனைவர் என்று அழைக்கபடுபவர்.
இந்திய குடிமகன் எனும்
அடையாள சான்று - personality Proof
வசிப்பிட சான்று - Residence Proof
உங்கள் புகைப்படம் 2 - Passport Size Photographs
ஏற்றுகொள்ளக்கூடிய தேவையான அடையாள சான்றுகள்
1. ஆதார் கார்ட் Aadhar Card
2. பள்ளி எஸ்.எஸ்.எல்.சி சான்றிதழ் School Leaving Certificate
3. மெட்ரிகுலேஷன் சர்டிபிகேட் Matriculation Certificate
4. டிகிரி சர்டிபிகேட் Degree from perceived Board or Institute கல்லூரி பட்டம்
5. பாஸ்போர்ட் Passport
6. ரேசன் கார்ட் Ration Card குடும்ப அட்டை
7. வோட்டர் ஐ டி Voter Card வாக்காளர் அடையாள அட்டை
8. டிரைவிங் லைசென்ஸ் Driving License ஓட்டுனர் உரிமம்
ஏற்றுகொள்ளக்கூடிய தேவையான வசிப்பிட அடையாள சான்றுகள்
1. ஆதார் கார்ட் Aadhar Card
2. பாஸ்போர்ட் Passport
3. ஏலக்டிரிக்சிட்டி பில் Electricity Bill
4. டெலிபோன் பில் Telephone Bill
5. வாட்டர் பில் Water Bill தண்ணீர் வரி கட்டிய ரசீது சொத்து வரி ரசீது
6. வோட்டர் ஐ டி Voter Card வாக்காளர் அடையாள அட்டை
பில்ஸ் 6 மாதங்களுக்குள் இருக்க வேண்டும்
கிராம தொழில் முனைவர் கிழ் கண்ட வழிமுறைகளை மேற்கொண்டு பான் கார்ட் விண்ணப்பத்தை நிரப்பி விண்ணப்பம் செய்வார்.
கிராமபுற தொழில் முனைவர் கிழ் கண்ட வழி முறைகளை பின் பற்றி வின்னப்பத்தை பூர்த்தி செய்வார்.
கிராமபுற தொழில் முனைவர் முதலில் பிரத்தியோகமாக வழங்கப்பட்ட அடையாளஎண் மற்றும் கடவு சொல்லை பயன்படுத்தி இணையதளத்தில் நுழைந்து சேவைகள் மேற்கொள்வார்
விண்ணப்பத்தில் கேட்கப்பட்ட புள்ளி விவரங்களை டைப் செய்து பூர்தி செய்யவேண்டும்.
பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், கையெழுத்து, தேவையான சான்றிதழ்கள் மற்றும் பான் விண்ணப்பம் முதலியவவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
பிறகு பணம் செலுத்த வேண்டும்
அதன் பிறகு விண்ணப்பம் செய்ததற்கான அத்தாட்சியை பதிவுறக்கம் செய்ய வேண்டும்.

தகுதிகள் மற்றும் தேவைகள்

C S C மையம் துவக்க தகுதிகளும், தேவைககளும்:- -

உங்கள் பகுதியில் நீங்கள் தொடங்க வேண்டும் என்றாலும்,இத் திட்டத்தில் பங்கு எடுத்து கொள்ள வேண்டும் என்றாலும் அதற்கு என்னென்ன தேவை என்பதை பார்போம். கல்வி தகுதி ,வயது வரம்பு , நீள, அகலம் இடவசதி , மையம் நடத்துவதற்கு தேவையான மின்/மின்னணு உபகரணங்கள், நுகர்வோர் வந்து செல்ல வசதி, பஞ்சாயத்து கிராமம். அல்லது புறநகரம் மற்றும் குறிபிட்டுள்ள விதி முறைகள்.

மையம் ஆரம்பிக்க விருப்பமுள்ளவர் உள்ளூரில் வசிப்பவராக இருக்க வேண்டும். .

18 வயது நிரம்பி இருக்க வேண்டும் .

மெட்ரிகுலேஷன் அல்லது 10 வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

மற்ற தேவைகள் :

விண்ணப்பதாரர் உள்ளூர் மொழியை சரளமாக எழுதவும் படிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும் .

அடிப்படை ஆங்கில அறிவும், கணிணியை இயக்கும் திறன் படைத்தவராகவும் இருக்க வேண்டும்.

அலுவலக அமைப்பு எப்படி இருக்க வேண்டும்,

உங்கள் பகுதியில் CSC (Common Service Center) துவக்க தகுதியும் ஆர்வமும் இருந்தால் மைய கட்டமைப்பு எப்படி அமைய வேண்டும் என்பதை பார்ப்போம்.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின்படி அரசின் மின்னணு சேவைகளை பொதுசேவை மையம் வழியாக மக்களுக்கு வழங்க மத்திய அரசு சில வழிமுறைகளை முறைபடுத்தி உள்ளது. இந்தியா முழுவதும் சுமார் 2.50.000 மையங்களை நிறுவ அரசு திட்டமிட்டு உள்ளது. தகுதியானவர்கள் உங்கள் பகுதியில் துவக்க "சேவை வழங்கும் முகமை"யை Service Center Agency (SCA) தொடர்புகொள்ளலாம்.

பொதுசேவை மையம் துவக்க சட்ட திட்டங்கள் (Prerequisite-முன்நிபந்தனை) என்னென்ன என்று பார்ப்போம்.

உள், வெளி CSC கட்டமைப்புக்கு தேவையானவை:

சுமார் 10X10 சதுரஅடி உள்ள இடவசதி.

இரண்டு கணினிகள்-5 மணி நேர தடையில்லா தொடர்மின்சார இணைப்பு UPS, அல்லது போர்ட்டபிள் மின்சாரம் வழங்கும் சாதனம், அத்துடன் உரிமம் பெற்ற Windows 10 அல்லது அதற்கு மேல் உள்ள இயங்கு மென்பொருள் கணினியில் நிறுவி இருக்க வேண்டும்.

இரண்டு அச்சிப்பொறி இயந்திரங்கள் (Inkjet+ Dot Matrix)

குறைந்த கொள்ளளவு 512MB கொண்ட RAM (படிக்கும் நினைவு திறன்)

120 GB வன்தட்டு Hard Disk Drive

டிஜிட்டல் அல்லது வெப் கேமரா

இணைய இணைப்பு .வங்கி சேவைகளுக்காக Biometric/IRIS Authentication Scanner CD/DVD'S

மொத்த திட்ட மதிப்பு சுமார் 1.25 to 1.50 லட்சம் ஆகலாம்.(இட வசதி நீங்கலாக)

சேவைகள்

இந்தியாவில் (CSC) பொது சேவை மையம் மக்களுக்கு பலவிதமான சேவைகளை வழங்கி வருகிறது. இந்தியாவில் உள்ள கிராமம் நகரம் மாவட்ட அளவில் பல்வேறு இடங்களில் இயங்கி வருகிறது.

மூன்று விதமான சேவைகள்

அரசு – மக்களுக்கு,

தொழில், வியாபாரம் - மக்களுக்கு,

தொழில் - வியாபாரம்

அரசு மக்களுக்கு வழங்கும் சேவைகள்:-

பிறப்பு,இறப்பு சான்றிதழ், விண்ணப்பனகளை பதிவிறக்கம் பதிவேற்றம் செய்யவும் , சொத்து வரி செலுத்தவும்,பஸ் பாஸ், பாஸ்போர்ட் , ரயில்வே டிக்கட்,லைசென்ஸ் பெர்மிட், மான்யம் பெறுதல் , ஆகியஅரசு சேவைகள் ஒரே இடத்தில் அலசல் இன்றி மக்கள் பெறுவதற்கு சிறந்த இடம் பொது சேவை மையம். விரிவான சேவைகள் கிழே கொடுக்க பட்டுள்ளது .

இன்சூரன்ஸ் சேவைகள்,பாஸ்போர்ட், எஸ்பி.ஐ, ஐ.சி.சி.ஐ. மற்றும் காப்பிட்டு நிறுவனங்களின் பிரிமிய தொகை செலுத்தவும், மாவட்ட மின்னணு சேவைகள், பென்ஷன் சர்வீஸ் தேசிய திறந்த நிலை பள்ளி படிக்க விண்ணப்பம் செய்யலாம்,

NIELIT சேவைகள், ஆதார் கார்ட் அச்செடுதல், புதிய பதிவை மேற்கொள்ளல், அப்பல்லோ டெலிமெடிசன், பான்கார்ட் விண்ணப்பம், வாக்காளர் அட்டை சேவைகள்,

மின்சாரபில் செலுத்துதல், அஞ்சல்துறை சேவைகள்,

பொது சேவை மையம் வழங்கும் அரசு சார்ந்த/சார நிறுவனங்கள் வழங்கும் நுகர்வோருக்கான சேவைகள்:

இணைய வழி கிரிக்கெட் பயிற்சி, ரயில்வே ,ஆகாய விமானம் ,வெளியூர்பயண பயணசீட்டுகள்,பெறவும் , மொபைல் டி எச் ரி சார்ஜ் செய்வது , ஆங்கில மொழி பேச்சு பயிற்சி, இ-கமர்ஸ் வியாபாரம் ,விவசாய சேவைகள், csc அங்காடி,

இ – லேர்னிங் இன்னும் பல ....

தொழில் வியாபாரம் செய்பவர்களாகக் தேவையான சேவைக;ள் Business to Business(B2B) ஆகும் .சந்தை ஆராய்ச்சி, கிராமப்புற புள்ளி விவரங்கள் ஆகியவை இந்த பிரிவுக்குள் வருகிறது,

கல்வி சேவைகள்

பல்வேறு விதமான கல்வி சமந்தமான சேவைகள் CSC வழங்கி வருகிறது.

வயதுவந்தோர் கல்வி ;- - எழுத, படிக்க, பேச கல்வி விழிப்புணர்வை முதியோருக்கு வழங்கி வருகிறது,

இந்திரா காந்தி தேசியதிறந்த நிலை பல்கலை கழகம் நடத்தும் பட்ட படிப்பு களில் சேரவும் ,அனைத்துவிதமான சேவைகளும் CSC வழி பெறலாம்

டிஜிட்டல் விழிப்புணர்வு , MKCL Services, NIELIT Services, NIOS Services

நிதி சார்ந்த சேவைகள்

மற்ற சேவைகள்:- -

விவசாய மக்களுக்கு தேவையான தகவல்களை , சேவைகளை CSC வழங்கி வருகிறது. Indian Army, Indian Air Force அரசு வெளியிடும் வேலை வாய்ப்பு தகவல்களை CSC மையத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

வருமான வரி செலுத்த/படிவத்தை தாக்கல் செய்யலாம்,

Wednesday, 15 March 2017

மத்திய அரசின் பொது இ-சேவை மையம்

மத்திய அரசின் பொது இ-சேவை மையம்

CSC பொது இ - சேவை மையம்

இனிய இந்த வலைத்தளத்தில் மத்திய அரசின் பொது இ-சேவை மையம் குறித்த சிறப்புகள், வசதிகள், வாய்ப்புகள் CSC அமைப்புமுறை, CSC துவக்குவதற்கான தேவையான கல்வி தகுதி, இட வசதி, பண வசதி மற்றும் எங்கெங்கெல்லாம் ஆரம்பிக்கலாம், யார் யாரெல்லாம் துவக்கலாம். போன்ற தகவல்கள் இடம் பெற்று உள்ளன. மேலும் மக்களுக்கு தேவையான சான்றிதழ்கள் அவர்களுக்கு அருகிலே பெற, உங்கள் ஊருக்கு அருகே CSC மையங்கள் உள்ள இடங்கள். மையத்தின் பெயர், முகவரி, தொலைபேசிஎண் ஆகியனவும் உள்ளது. CSC குறித்த தகவல்களும், கிராம தொழில் முனைவோர் எப்படி பயன் படுத்த வேண்டும், மையம் இயக்க தேவையான வழி முறைகள், தொழில் நுட்பஉதவிகள், கூடுதல் தகவல்கள் வழங்கப்பட்டு உள்ளது. மேலும், என்ன, என்ன சேவைகள் வழங்க முடியும் எனவும், தெரிந்து கொள்ளலாம்.

அறிமுகம்:- -

பொது சேவை மையம் (CSC) இந்திய அரசு செயல் படுத்தி வரும் தேசிய மின்னனு திட்டத்தின் ஒரு பகுதி. அரசின் சேவைகள் மக்களுக்கு விரைவில் சென்று சேரவும் இடை தரகர்கள் இன்றி வழங்கவும் ஏற்படுத்தபட்ட திட்டம், அரசின் பல்வேறு துறைகள் மக்களுக்கு வழங்கும் சேவைகள் அனைத்தும் ஒரே இடத்தில் உயர்ந்த தரத்தில் குறைந்த செலவில் கிடைக்க செய்வது தான் இத் திட்டத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும். G2C, B2C, கிராம புறங்களில் சுமார் 2,50,000 CSC மையங்கள் ஏற்படுத்தவும் அரசு திட்டமிட்டு உள்ளது. இத் திட்டம் (PUBLIC PRIVATE PARTNERSHIP PPP - பொது-தனியார் பங்களிப்பு) கட்டமைப்பு மூலம் செயல் படுத்தப்படுகிறது.

CSC - சிறப்பு அம்சங்கள்:

கிராம தொழில் முனைவோரை உருவாக்குதல், தனியார் வழங்கும் சேவைகளும்

வழங்குதல் , சமுதாய மக்களின் தேவைகளின் அடிப்படையில்

பல்வேறுபட்ட சேவைகளை வழங்குதல் அவர்களின் திறமைகளை திறன்களை

வெளிகொனருதால், வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல்.

அரசு மற்றும் அரசுசார நிறுவனங்களின் சேவை முகவராக செயல்படல்,

பல்வேறுப்பட்ட G2C and B2C சேவைகள் ஒரே இடத்தில் வழங்குதல் ஒரு csc  

பொது மையம் 6 கிராமங்களை உள்ளடக்கி சேவை செய்யும். இதன் மூலம்

முதலில்  6,00,000 கிராமங்கள் பயன் பெறும் என்பதையும் இன்று தாண்டிவிட்டது.

கிட்டத்தட்ட 10,00,000 மேல் கிராம, நகர்புறங்களை சென்றடையும் என்று

எதிர்பார்க்கலாம்.

CSC - யின் அமைப்பு முறை :

பொது - தனியார் பங்களிப்பு முன்மாதிரி அடிப்படையில் 3 அடுக்கு அமைப்பு முறையில் வழங்கபடுகிறது.

State Designed Authority (SDA) - மாநில அரசின் கிழ் இயங்கும் மையங்கள்-மாநிலஅரசால் நியமிக்கபட்ட அமைப்பு CSC பொது சேவை மையங்களின் நிர்வாக செயல்படுகளின் பொறுப்புகளை ஏற்கும்

Administration Center Agency-SCA – சேவை மைய முகமை மூலம் இயக்குதல். பொது சேவை வழங்கும் உரிமையாளர் கிராம, நகர் புறங்களில் சேவை வழங்கும் இடங்களை உள்ளூர் அல்லது மாநில அளவில் தேர்ந்தெடுத்து சேவைகள் வழங்கலாம் இந்த முகமை சுமார்

500-1000 CSC பொது மையங்கள் நடத்தவும் பிரச்சாரங்கள் செய்து ஊக்குவிக்கவும் வழி நடத்தி பொறுப்பேற்க்கும் என தெருவித்துள்ளனர்.

Town Level Entrepreneur - கிராம புற தொழில் முனைவோர் நிர்வகிக்கும் மையங்கள்.

கிராம புற தொழில் முனைவர் பொது சேவை மையத்தை நடத்துபவர்.அதே கிராமத்தில்

வசிப்பவராக இருக்கவேண்டும்.மையத்தை சுற்றி உள்ள 6 (1+5) கிராமங்களுக்கு

சேவைகள் வழங்க உரிமை வழங்கப்படும்.

பொது சேவை மையம் CSC அமைக்க, இணையதளம் வழி விண்ணப்பம் செய்ய Services Provided by CSC

பாஸ்போர்ட்,பான் கார்ட், ஆதார் என்ரோல்மென்ட், பென்ஷன், போன்ற மத்தியஅரசின் திட்டங்களை பயன்படுத்தி கொள்ள வழங்கப்படும் சேவைகள், மற்றும் வாக்காளர் அட்டை பெறவும்.திருத்தம் செய்யவும்

இ – மாநில (E-District) சேவைகளான இன்சூரன்ஸ் , பிறப்பு/இறப்பு சான்றிதழ் பெறவும், தேசிய திறந்த நிலை பள்ளியில் சேர படிக்க பதிவு செய்தல் என CSC யில் பல சேவைகள் வழங்கப்படுகிறது.

CSC மையம் துவக்க தகுதிகள்?

கல்வி தகுதி, உச்சவரம்பு வயது, தெரிந்து கொள்ள? அடுத்த பகுதியில்....

பொது சேவை மையம் துவக்குவது எப்படி

பொது சேவை மையம் துவக்குவது எப்படி?

CSC முறைப்படி பதிவு செய்யும் வழி முறைகள் மற்றும் மத்திய அரசின் அனுமதி பெற்று உங்கள் பகுதியில் புதிய பொது சேவை மையம், இணைய வழி தடம் மூலம் துவக்கவும்.நடைமுறைகள் என்ன?

மையம் துவக்க தேவையான வயது. கல்வி தகுதி இட வசதி. உள்ளவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்து அனுமதி பெறலாம்.

மொசில்லா பயர் பாக்ஸ் ப்ரௌசர் மூலமாக இணையதளத்தை திறந்து கொள்ளவும்.

இணையதள பக்கத்தின் இடது பக்கதில் "Intrigued to turn into a CSC என்று குறிப்பிட்டுள்ள இடத்தில் கர்சரை வைத்து கிளிக் செய்யவும்.

பிறகு வரும் பக்கத்தில் வலது மேற்புறத்தில் Application என்று தெரியும் இடத்தில் கர்சரை கொண்டு செல்லவும். உடன் வரும் சப் மெனு வில் Fresh Application ஐ கிளிக் செய்யவும்.

பிறகு தோன்றும் பக்கத்தில் இடது பக்கத்தில் உள்ள கட்டத்தில் ஆதார் எண்ணை டைப் செய்யவும். அதன் கிழே காணப்படும் OTP ஐ கிளிக் செய்யவும்

அடுத்து கிழே காணப்படும் கட்டத்தில் உள்ள எண்களை (இது காப்ட்ச கோடு என்று சொல்வார்கள்.) அதன் பக்கத்தில் உள்ள கட்டத்தில் சரியாக டைப் செய்து Submit பட்டனை கிளிக் அழுத்தவும்.

இப்பொழுது கேட்கப்படும் விவரங்களை டைப் செய்யவும். உங்கள் கடையின் உள் வெளி போடோஸ் உங்கள் கடை உள்ள இடத்தின் புவியியல் புள்ளி விவரங்கள். இன்னும் பல ...

1. உங்கள் விண்ணப்பத்தின் நிலை அறிய

2. உங்கள் மினஞ்சல் முகவரி ரிஜிஸ்ட்ரேசன் எண் ஆதார் எண் ஆகியவற்றை டைப் செய்யவும்

3. பொது சேவை மையம் மூலமாக நீங்கள் வழங்க படும் சேவைகள் குறித்து தெரிந்து கொள்ள

4. CSC மையம் ஆரம்பிக்க தேவையான தகுதிகள்... அடுத்த பகுதியில்...