மத்தியஅரசின் பொது இ சேவை மூலம் வழங்கப்படும் FASTAG அவசரமா! அவசியமா!!
தேசிய நெடுஞ்சாலைத்துறை, சாலை போக்குவரத்தை
மேம்படுத்தும் வகையில் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது...
இதற்காக குறிப்பிட்ட தூர இடைவெளியில் சுங்கச்சாவடிகள் உள்ளன.. இந்த சுங்கச்சாவடிகளை
கடந்து செல்லும் வாகனங்களுக்கு சாலை பராமரிப்பு மற்றும் பயன்பாட்டு கட்டணம்
வசூலிக்கப்படுகிறது. இதற்கிடையே, சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்காக வாகனங்கள் நீண்ட
வரிசையில் காத்திருக்க வேண்டியிருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி
வந்தனர்.. இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு சுங்கச்சாவடிகளில் நேர விரயத்தை
தவிர்க்கும் வகையில் Fastag வசதி அறிமுகப்படுத்தியது. . இதன்படி
ரேடியோ அலைக்கற்றை மூலம் அடையாளம் காணும் ஸ்டிக்கர் காரில் ஒட்டப்படும். இதை
வைத்து சுங்கச் சாவடிகளில் மின்னணு பணப் பரிவர்த்தனை நடைபெறும். பாஸ்ட் டேக்
வாடிக்கையாகளர்கள் ஒரு முறைக்கு ரூ 100 - ரூ 1 லட்சம் வரை RECHARGE
செய்து கொள்ளலாம். மத்திய அரசின் இ
சேவை, COMMON SERVICE CENTER,, CREDIT
/ DEBIT CARD, NEFT, RTGS, NET BANKING ஆகிய வசதிகள் மூலம்மகவும் ரீசார்ஜ் செய்யலாம். அல்லது சுங்கசாவடிகளிலு் நேரடியாக . ரீசார்ஜ் செய்யலாம்
Fastag கார்டை பயன் படுத்துவது எப்படி ?
இந்த FASTAG கார்டை நீங்கள் காரின் முகப்பு
கண்ணாடியில் பொருத்தி கொண்ட பின் நீங்கள் சுங்கசாவடியில் பாஸ்ட் டேக்
வாடிக்கையாளர்களுக்காக உள்ள தனி பாதையில் நீங்கள் செல்லும் போது உங்கள் காரின்
பாஸ்ட் டேக் கார்டு மூலம் உங்கள் வருகை உடனடியாக பதிவு செய்யப்பட்டு உங்கள்
நீங்கள் ரீச்சார்ஜ் செய்து வைத்திருந்த பணத்தில் இருந்து கழித்து கொள்ளப்படும்
நாடு முழுவதும் குறிப்பிட்ட சில டோல் பிளாசாக்களில் கடந்த
2016ம் ஆண்டே முதலே பாஸ்ட்டேக் மின்னணு அட்டை பொருத்தப்பட்ட வாகனங்கள்
இயக்கப்பட்டு வருகின்றன. இது முன்பு குறிபிட்டது போல ரேடியோ அதிர்வெண் அடையாள
தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இதற்காக வாகன உரிமையாளர்களுக்கு வங்கிகளில் வழங்கப்படும் வாகன எண்ணுடன் வழங்கப்படும் FASTag வாகன முகப்பு கண்ணாடியில் ஒட்டப்படும். டோல்பிளாசாக்கள் அருகில் 20 முதல் 25 மீட்டருக்குள் வாகனங்கள் வரும்போது அங்கு பொருத்தப்பட்டுள்ள ரேடியோ அதிர்வெண் அடையாள தொழில்நுட்ப சாதனம், வாகன பாஸ்ட் டேக் மூலம் வாகன எண், வங்கி கணக்கு ஆகியவற்றை சில நொடிகளில் கிரகித்துக்கொள்ளும். வாகனம் சாவடிக்கு வந்ததும் அனுமதிக்கும். அந்த இடைவெளியில் வாகன நுழைவுக்கான கட்டணம் தானாக வங்கி கணக்கில் இருந்து கழிக்கப்படும். இதற்காக மேற்கண்ட வங்கிகளில் வாகன எண்ணுடன் வங்கி கணக்கு தொடங்கி பாஸ்ட்டேக் பெற வேண்டும். இந்த நடைமுறை மூலம் ஒவ்வொரு டோல்பிளாசாவில் கடக்கும் வாகனங்களின் எண்ணிக்கை துல்லியமாக தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் அறியப்படுவதுடன், வாகனங்களுக்கான கட்டணம் சரியாக வசூலிக்கப்படுவதையும் கண்காணிக்க முடியும். அதோடு வாகனங்கள் கடக்கும் தூரத்தை கணக்கிட்டு அதற்கான கட்டணம் மட்டும் கழிக்கப்படும். இந்த நடைமுறை டிசம்பர் 1ம் தேதி முதல் கட்டாயமாக்கியது வாகனங்களுக்காக டோல்பிளாசாக்களில் உள்ள 5 நுழைவு வாயில்களில் 4 ஒதுக்கப்படுகிறது. அந்த வசதியில்லாத வாகனங்களுக்கு ஒரு வழியில் மட்டுமே அனுமதி வழங்கப்படும்’ என்று தெரிவித்தனர் இந்த வசதிக்காக வாகன ஓட்டிகள் வேகவேகமாக பாஸ்ட் டேக் fFASTAG)
முறைக்கு விண்ணப்பித்து வந்தனர்.இந்த நிலையில் மத்திய அரசு தரப்பில் புதிய அறிவிப்பு ஓன்று வெளியிட்டுள்ளது .அதாவது பாஸ்ட்டேக் (fFASTAG)
திட்டத்தை டிசம்பர் 15
-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக கூறியுள்ளது..
FASTag என்றால் என்ன?
மின்னணு பண பரிவர்த்தனை அட்டை,
பாஸ்ட் டேக் ஒரு ஆன்லைன் பார் எண் கொண்ட மின்னணு அட்டை ஆகும், இது வானொலி அதிர்வெண் (RADIO FREQUENCY IDENTIFICATION) அடையாளம் பயன்படுத்தி செயல்படுகிறது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையதால் (NHAI) இயக்கப்படுகிறது..
FASTag எப்படி வேலை செய்யும்?
பாஸ்ட் டேக் என்பது வாகனங்களில் நிறுவப்பட்டுள்ள ஒரு வகை சாதனம், முன் பணம் அட்டை அல்லது கணக்கு மூலம் நேரடியாக உங்கள் கணக்கு அல்லது ப்ரீபெய்டு கார்டில் இருந்து டோல் கட்டண வசூல் ஆணையத்திடம் பயன்படுத்தப்படுகிறது. டேக் செய்யப்பட்ட டோல் பிளாசா வரும்போது,
அதில் உள்ள சிப்,
டோல் பிளாசாவில் உள்ள இயந்திரத்தை வாசிக்கிறது. அதன் பிறகு டோல் கேட் திறந்து,
நிர்ணயிக்கப்பட்ட கட்டணக் கட்டணம் நம்முடைய பாஸ்ட் டேக் ல் வைதிருக்கும் பணத்தில் இருந்து கழிக்கப்படுகிறது... இன்னும் விரிவாக பார்க்கலாம் அதாவது
வாகனம் சுங்கச்சாவடி கட்டணம் செலுத்தும் பகுதியில் வந்து நின்றவுடன் வாகனத்தின் கண்ணாடியில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கரில் உள்ள பார்கோடு அங்கு பொருத்தப்பட்டுள்ள கருவி மூலம் ஸ்கேன் செய்யப்படும்.
பின்னர் உரிய தொகை அவர்களது கணக்கில் இருந்து எடுத்து கொள்ளப்படும். செலுத்திய கட்டணம் குறித்த எஸ்.எம்.எஸ். தகவல் அவர்களின் செல்போன் எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும். இந்த முறையில் அந்த அந்த டோல் பிளாசா நுழைவு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். சலுகைக்கட்டணங்களுக்கும் கார்டை பயன்படுத்தி கட்டணம் செலுத்தலாம்... இந்த கார்டு 5 வருடங்கள் வரை செல்லத்தக்கது. இதற்காக குறிப்பிட்ட தொகை பதிவுக்கட்டணமாக வசூலிக்கப்படும். .
நீங்கள் சுங்கசாவடிகளை கடக்கும் போது பல முறை பாஸ்ட் டேக் என்ற ஒரு தனியாக ஒரு லைன் இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள் அதன் விழியாக செல்லும் வாகனம் நிற்க்காமல் நேராக செல்லும்.
அவர்கள் பாஸ்ட் டேக் என்ற கார்டை பயன்படுத்தி சுங்க சாவடி கட்டணம் செலுத்தி வருகின்றனர். பாஸ்டேக் கார்டு என்பது ஒரு ATM
கார்டு போன்றது. இதை வாங்கி நாம் காரின் கண்ணாடியில் பொருத்தி கொள்ள வேண்டும். மேலும் இந்த கார்டிற்கு நாம் தேவையான அளவிற்கு பணம் முன்னரே செலுத்தி ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறாக நாம் கார்டை ரீசார்ஜ் செய்யப்பட்ட கார்டை காரின் கண்ணாடியில் முன் பாக்கம் ஓடிவிட்டால் காரின் சுங்கசாவடியில் நுழையும் இடத்தில் ஒரு மிஷின் பொருத்தப்பட்டிருக்கும். அந்த மிஷின் நம் காரின் எண்ணை கண் இமைக்கும் நொடியில் கண்டறிந்து நமது வருகையை பதிவு செய்யும். பதிவு செய்யப்பட்டவுடன் நாம் முன்னரே ரீசார்ஜ் செய்து வைத்திருந்த பணத்தில் இருந்து அந்த சுங்கசாவடிக்கான பணம் கழிக்கப்பட்டு விடும். மேலும் அந்த பகுதியை அடைத்திருக்கும் கம்பியும் தானாக திறந்து விடும். இதன் மூலம் சுங்கசாவடியில் பணம் செலுத்துவதற்காக வாகனங்களை வரிசைகட்டி நிறுத்துவதை தவிர்க்கலாம்.
இந்த பாஸ்ட் டேக் கார்டுகள் எல்லா டோல்கேட்களிலும் கிடைக்கும்.
1. நீங்கள் அந்த காரை பயன்படுத்த போகும் காரின் R C BOOK.
2. காரின் உரிமையாளரின் ஒரு பாஸ்போர்ட் சைஸ் PHOTO
3. வாகன உரிமையாளரின் விபரங்கள் K Y C படிவமாக நிரப்பபடவேண்டும்.
4. இருப்பிட சான்று மற்றும் அடையாள சான்றிற்காக டிரைவிங் லைசன்ஸ், ஆதார் கார்டு,பான் கார்டு,, வாக்காளர் அடையாள அட்டை, இதில் ஏதேனும் ஒன்றின் XEROX
நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யம் போது FASTag கார்டு பெறுவதன் மூலம் நாம் பல நன்மைகளை பெற முடியும்.
கையில் பணம் எடுத்து செல்ல தேவையில்லை,
சுலபமாக பணத்ததை செலுத்தும் வசதி
சுங்கசாவடிகளில் பணம் செலுத்த வாகனத்தை வரிசையில் நிறுத்த தேவையில்லை.ஏன் வாகனத்தை நிறுத்தமலே நாம் அந்த இடத்தை கடந்து சென்று கொண்டே இருக்கலாம்.
பாஸ்ட் டேக் கார்டை ஆன்லைன் மூலம் கிரெடிட்- டெபிட் அல்லது நெட் பேங்கிங் ஆகிய ஆப்ஷன்களை கொண்டு பயன்படுத்தலாம்.
சுங்கசாவடிகளை கடந்த பின்பு கழிப்பட்ட பணம் மற்றும் மீதம் உள்ள பணம் குறித்த தகவல் எஸ்.எம்.எஸ். மூலம் உடனடியாக அனுப்பி வைக்கப்படுகிறது.
பாஸ்ட் டேக் வாடிக்கையாளர்களுக்கு சுங்கசாவடி கட்டணத்தில் 2020 மார்ச் வரை குறிப்பிட்ட சதவீத தள்ளுபடி தரப்படுகிறது.
FASTag வாடிக்கையாகளர்கள் ஒரு முறைக்கு ரூ 100 - ரூ 1 லட்சம் வரை ரீ சார்ஜ் செய்துகொள்ளலாம். “மத்திய அரசின் இ சேவை: மூலம், டெபிட்
கார்டு,
கிரெடிட் கார்டு,
NEFT, RTGS, நெட் பேங்கிங் ஆகிய வசதிகள் மூலம் ரீசார்ஜ் செய்யலாம். அல்லது சுங்கசாவடிகளிலும் நேரடியாக சென்று ரீசார்ஜ் செய்யலாம்.
இந்த பாஸ்ட் கார்டை நீங்கள் காரின் முகப்பு கண்ணாடியில் பொருத்தி கொண்ட பின் நீங்கள் சுங்கசாவடியில் பாஸ்ட் டேக் வாடிக்கையாளர்களுக்காக உள்ள தனி பாதையில் நீங்கள் செல்லும் போது உங்கள் காரின் பாஸ்ட் டேக் கார்டு மூலம் உங்கள் வருகை உடனடியாக பதிவு செய்யப்பட்டு உங்கள் நீங்கள் ரீச்சார்ஜ் செய்து வைத்திருந்த பணத்தில் இருந்து கழித்து கொள்ளப்படும். பாஸ்ட் டேக் வாடிக்கையாளர்களுக்க வழங்கப்பட்டுள்ள ஐ.டி. பாஸ்வேர்டை பயன்படுத்தி அவர்களது பேலன்ஸை தெரிந்து கொள்ளலாம். மேலும் இந்த பாஸ்ட் டேக் கார்டை பிளாக் செய்ய கார்டில் வழங்கப்பட்டுள்ள கஸ்டமர் கேர் எண்ணில் தொடர்பு கொண்டு பாஸ்ட் டேக் கார்டு ஐ பிளாக் செய்யவும் முடியும். மேலும் பாஸ்ட் டேக் கார்டு தொலைந்து விட்டால் அந்த பாஸ்ட் கார்டை பிளாக் செய்து புதிய பாஸ்ட் டேக் கார்டை வாங்கி கொள்ளலாம். பழைய பாஸ்ட் டேக் கார்டில் இருந்த பேலன்ஸ் புதிய பாஸ்ட் டேக் கார்டிற்கு மாற்றப்படும்.
FASTag வாங்கினால் என்னென்ன நன்மைகள் ?
பாஸ்ட் டேக் பயன்படுத்துவதால்,
உங்கள் கார் அல்லது வேன்,
பஸ், லாரி டோல் பிளாசாவில் நிற்காமல் எளிதாக சேகரிக்க முடியும்,
இது டோல் பிளாசாவில் வரிசையை குறைத்து உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும் .
வாகனம் சுங்கச்சாவடி கட்டணம் செலுத்தும் பகுதியில் வந்து நின்றவுடன் வாகனத்தின் கண்ணாடியில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கரில் உள்ள பார்கோடு அங்கு பொருத்தப்பட்டுள்ள கருவி மூலம் ஸ்கேன் செய்யப்படும்.
பின்னர் உரிய தொகை அவர்களது கணக்கில் இருந்து எடுத்து கொள்ளப்படும். செலுத்திய கட்டணம் குறித்த SMS.
தகவல் அவர்களின் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும். இந்த முறையில் ஏற்கனவே செலுத்தி வந்த கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். சலுகைக்கட்டணங்களுக்கும் கார்டை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த கார்டு 5 வருடங்கள் வரை செல்லத்தக்கது.
FASTag வாங்க தேவையான ஆவணங்கள்:-
வாகன உரிமையாளரின் கடவுச்சீட்டு அளவு புகைப்படம்
வாகனப் பதிவுச் சான்றிதழ் (RC)
ஆவணங்கள் - இவற்றில் ஏதேனும் ஒன்று
ஆதார் அட்டை
பான் கார்டு,
ரேஷன் கார்டு
வாக்காளர் அடையாள அட்டை
ஓட்டுனர் உரிமம்.
FASTag வாங்குவது எங்கே ?
எப்படி எங்கே வாங்க வேண்டும்?
அருகிலுள்ள TOLL
PLAZA,, வங்கிகள்,
மற்றும் சில ஆன்லைன் தளங்களில்,
வாங்கலாம்.. மத்திய அரசின் இ சேவை மையங்களில், CSC, எஸ்பிஐ,
எச் டி எஃப் சி,
ஐ.சி.ஐ.சி.ஐ உள்ளிட்ட பல வங்கிகள் மற்றும் ஆன்லைன் பிளாட்பார்ம் பே டிஎம்,
அமேசான் டாட் காம்,.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்,
பாரத் பெட்ரோலியம்,
இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவற்றின் பெட்ரோல் பம்புகள்,.
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் எனது துரித செயலி. மூலம் வாங்க முடியும்
FASTag ல் ரீசார்ஜ் செய்வது எவ்வாறு?
ஆன்லைன் ரீசார்ஜ் செய்ய பாஸ்ட் டேக் மிகவும் எளிது, நீங்கள் கூகிள் ப்ளே ஸ்டோரில் இருந்து மைஃபாஸ்ட் டேக் என்ற செயலியை பதிவிறக்க வேண்டும். பிறகு அதை திறந்து உங்கள் விரைவு டேக் கணக்கு தொடர்பான அனைத்து தகவல்களையும் வழங்க,
நீங்கள் நிகர வங்கியியல்,
மத்திய அரசின் இ சேவை, NEFT, UTI கட்டணம் அல்லது PAYTM இருந்து ஆன்லைன் ரீசார்ஜ் செய்ய முடியும். FASTAG
கணக்கில், நீங்கள் குறைந்தபட்சம் ரூ100 மற்றும் அதிகபட்சம் ரூ10,000 உங்கள் KYC முழுமை பெற்றால், நீங்கள் FASTAG கணக்கில் ரூ1,00,000 வரை இருப்பு செய்து,
வைக்கலாம்.
முழுமையாக பயன் பாட்டிற்கு வரும் பொது காற்று மாசு குறையும். சுற்று சுழல்பாதிப்பு வெகுவாக குறையும். பயண நேரம் குறையும் குறித்த நேரத்தில் வெளியூர் செல்லலாம். நல்ல சுற்று சுழளினால் உடல் நலம் பாதுகாக்க படும் எரிபொருள் மிச்சமாகும் அந்நிய செலாவணி மிச்சப்படும்..
நினைத்து பாருங்கள் இரண்டு சக்கர வாகனங்கள்,
நான்கு சக்கர வாகனங்கள் இன்னும் பல சக்கர வாகனங்கள் வெளியிடும் புகை நமக்கு எப்படியெல்லாம் பதிப்பை ஏற்படுத்துகிறது.அதுவம் சில நேரங்களில் நாம் வெளியூர் செல்ல பல மணி நேரம் டோல் கேட்டில் பேருந்துக்காக நின்று இருப்போம் அந்த நேரங்களில் நாம் சுவாசிக்கும் பொது காற்று மாசினால் பலவிதமான தொல்லைக்கு ஆட்பட்டு இருப்போம் இனி அந்த தொல்லை இல்லை.
ஆரம்பத்தில்,
வாகன உரிமையாளர்களுக்கு FAST TAG கிடைப்பதில் சிரமம் இருந்தது, இது டோல் அலுவலகத்தில் மக்கள் அவசரத்தை ஏற்படுத்தியது, ஆனால் இப்போது வங்கியில் இருந்து சிஎஸ்சிக்கு FASTAG கிடைக்கின்றன,
இது இருந்தபோதிலும்,
அதை நிறுவ மக்கள் விழிப்புணர்வைக் காணவில்லை. சராசரியாக, தினமும் 20 முதல் 25 பேர் வரை விண்ணப்பங்கள் FASTAG நகரத்திற்கு வருகின்றன, அதே நேரத்தில் வாகனங்களின் எண்ணிக்கை மில்லியன் கணக்கில் உள்ளது.
இங்கே கிளிக் செய்வதன் மூலம் பாஸ்ட்டேக் செயலியை பதிவிறக்கம் செய்யலாம்
No comments:
Post a Comment